செய்திகள்
தீப்பற்றி எரியும் காட்சி

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 4 மணி நேரம் போராடி அணைத்தனர்

Published On 2020-10-01 04:21 GMT   |   Update On 2020-10-01 04:21 GMT
புனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பெருட்கள் கருகின.
புனே:

மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் உள்ளது குர்கும்ப் தொழில் வளாகம். இங்குள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ஆலையின் அனைத்து இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் தொழிற்சாலையை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் எரிந்துவிட்டன. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதே பகுதியில் கடந்த மே மாதம் ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News