செய்திகள்
கொரோனா பரிசோதனை

24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு தொற்று... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது

Published On 2020-09-30 04:13 GMT   |   Update On 2020-09-30 04:13 GMT
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 62,25,764 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 83.33 சதவீதமாகவும் உள்ளது. 
Tags:    

Similar News