செய்திகள்
தேஜஸ்வி சூர்யா, டி.கே.சிவக்குமார்

பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறதா?: டி.கே.சிவக்குமார் கண்டனம்

Published On 2020-09-29 02:04 GMT   |   Update On 2020-09-29 02:04 GMT
பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரூ பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரூ பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேஜஸ்வி சூர்யா எம்.பி. பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது நாட்டின் வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற கருத்தைக் கூறினால் முதலீட்டாளர்கள் எப்படி கர்நாடகம் வருவார்கள். இதற்கு பிரதமர், நிதி மந்திரி பதில் சொல்லவேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News