செய்திகள்
சுஷாந்த்

சுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை - சி.பி.ஐ. அறிக்கை

Published On 2020-09-29 00:11 GMT   |   Update On 2020-09-29 00:11 GMT
இந்தி நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை என சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
புதுடெல்லி:

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலி ரியா உள்ளிட்ட குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

திடீரென, போதைப்பொருள் விவகாரத்தில் வழக்கு திசை திரும்பி உள்ளது. நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங் உள்ளிட்ட நடிகைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதை சுஷாந்த் குடும்ப வக்கீல் விகாஸ்சிங் குறை கூறினார். இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சி.பி.ஐ. நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “சுஷாந்த் மரண வழக்கில் சி.பி.ஐ. இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. அனைத்து அம்சங்களையும் விசாரித்து வருகிறது. எந்த அம்சத்தையும் விட்டுவிடவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News