செய்திகள்
கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு
கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க கேரளாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் கொரோனா பரவல் காரணமாக திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் கொரோனா பரவல் காரணமாக திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.