செய்திகள்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

கொரோனா தடுப்பூசி 2021 காலாண்டில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

Published On 2020-09-28 17:10 GMT   |   Update On 2020-09-28 17:10 GMT
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி 2021 முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ‘‘தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில், உலகின் பல நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, 3 விதமான தடுப்பூசிகள் தயாரிப்பு, மருந்தியல் பரிசோதனையில் உள்ளது’’ என்றார்.

மேலும், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி 2021 முதல் காலாண்டில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News