செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா

Published On 2020-09-28 16:44 GMT   |   Update On 2020-09-28 16:44 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டியது. நேற்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி, மாநிலத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 538 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 79 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 57 ஆயிரத்து 879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 347 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 697 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News