செய்திகள்
தேசிய விசாரணை முகமை

சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ-யின் கிளை: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Published On 2020-09-28 14:59 GMT   |   Update On 2020-09-28 14:59 GMT
சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தேசிய விசாரணை முகமையின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.

இந்நிலையில் சென்னை, மணிப்பூரில் உள்ள இம்பால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை, மற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும்.

பயங்கரவாத செயல்குறித்து தகவல் கிடைத்தால் சரியான நேரத்தில் தகவல்கள் திரட்ட இந்த கிளைகள் உதவிகரமாக இருக்கும்.
Tags:    

Similar News