செய்திகள்
பொதுமக்களுக்கு பரிசோதனை

இந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்

Published On 2020-09-26 04:28 GMT   |   Update On 2020-09-26 04:28 GMT
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48.49 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 59,03,933 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,49,585 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 93420 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,60,969 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.58 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 82.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News