செய்திகள்
ஏர் இந்தியா

உள்நாட்டு விமானங்களில் ஒரு கோடிக்கு அதிகமானோர் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்

Published On 2020-09-25 17:00 GMT   |   Update On 2020-09-25 17:00 GMT
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் ரெயில், பஸ் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ‘‘அடுத்தடுத்த ஊரடங்கு கட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. மே 25-ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமானோர் பயணித்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமானப் பயணம் செய்யத் துவங்கி உள்ளனர். மார்ச் 25-ல் நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து மே 25-க்குப் பிறகு படிப்படியாக விரிவு படுத்தப்பட்டுள்ளது’’ என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News