செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி

Published On 2020-09-25 16:28 GMT   |   Update On 2020-09-25 16:28 GMT
எடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி அனுமதி அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. முதல்நாளில் மறைந்த பா.ஜனதா எம்.பி., சுரேஷ் அங்காடிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று (24-ம்தேதி) வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமயைா சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சந்தித்து முதல்வர் எடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொணடு வர உள்ளதாக கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில் குறைந்த பட்சம் 23 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து தேவை என்பதை சபாநாயகர் கூற 23-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது என்று சித்தராமையா கூறினார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் ஒப்புக்கு கொண்டார்.

இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘அரசு அனைத்து விதத்திலும் தோல்வியுற்றது என்றும், ஊழல்மலிந்து விட்டதாகவும், வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன் மாநிலத்தின் நிதிநிலை மோசமடைந்து வருவதால் மாநில மக்களும் சட்டசபையும் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது.

எடியூரப்பாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய சித்தராமையா, மருத்துவ உபகரணங்கள், மடிக்கணினிகள், மானியங்களை வெளியிடுவது போன்றவற்றிலும் ஊழல் நடந்தேறி உள்ளது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து பா.ஜனதாவினர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியில் போதிய பலம் இல்லை. அக்கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் எங்கள் பக்கம் வருவார்கள் என தெரியவில்லை. இது ஒரு அரசியல் வித்தை’’ எனக் கூறினர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தேதியை அடுத்த ஒரிரு நாட்களில் சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
Tags:    

Similar News