செய்திகள்
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலி
கர்நாடகத்தில் பசவகல்யாண் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பி.நாராயணராவ் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பசவகல்யாண் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.நாராயணராவ் (வயது 63). காங்கிரசை சேர்ந்த அவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த 1-ந் தேதி பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4 மணியளவில் மரணம் அடைந்தார்.
கர்நாடகத்தில் ஏற்கனவே எம்.பி.க்கள் அசோக் கஸ்தி, சுரேஷ் அங்கடி ஆகியோர் கொரோனாவுக்கு பலியாயினர். இந்த நிலையில் எம்.எல்.ஏ. ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் பசவகல்யாண் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.நாராயணராவ் (வயது 63). காங்கிரசை சேர்ந்த அவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த 1-ந் தேதி பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4 மணியளவில் மரணம் அடைந்தார்.
கர்நாடகத்தில் ஏற்கனவே எம்.பி.க்கள் அசோக் கஸ்தி, சுரேஷ் அங்கடி ஆகியோர் கொரோனாவுக்கு பலியாயினர். இந்த நிலையில் எம்.எல்.ஏ. ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.