செய்திகள்
கோப்புப்படம்

அந்தமானில் 3,712 பேருக்கு கொரோனா

Published On 2020-09-25 00:56 GMT   |   Update On 2020-09-25 00:56 GMT
அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது.
போர்ட்பிளேர்:

அந்தமான் நிகோபார் தீவுகளில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது.

இவர்களில் 166 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3 ஆயிரத்து 494 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 52 பேர் பலியாகி இருக்கிறார்கள். மொத்தம் 53 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News