செய்திகள்
காணொலி மூலமாக எடியூரப்பாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்த காட்சி

எடியூரப்பாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த உத்தரவு

Published On 2020-09-24 02:12 GMT   |   Update On 2020-09-24 02:12 GMT
பிரதமர், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. மேலும் மாநிலத்தில் மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மரண விகிதத்தை குறைக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடகத்தில் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார்.

இதில் பேசிய எடியூரப்பா, கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் காரணமாக வைரஸ் பரவல் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News