செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் இன்று புதிதாக 4,125 பேருக்கு கொரோனா

Published On 2020-09-22 13:46 GMT   |   Update On 2020-09-22 13:46 GMT
கேரளாவில் இன்று புதிதாக 4,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் புதிதாக 4,125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று 40,382 வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை கொரோனாவால் 40,382 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News