செய்திகள்
வைரல் படம்

அமெரிக்க பேருந்தில் அம்பேத்கர் படம் இருப்பதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-09-22 05:38 GMT   |   Update On 2020-09-22 05:38 GMT
அமெரிக்காவின் கொலம்பியாவில் ஓடும் பேருந்தில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டுள்ளதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

டாக்டர் பிஆர் அம்பேத்கர் மற்றும் அவரது மனைவி சவிதா அம்பேத்கர் ஆகியரது படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம், அமெரிக்காவின் கொலம்பியாவில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொலம்பியாவில் ஓடும் பேருந்தில் பாபாசாகேப் படம் ஒட்டப்பட்டு உள்ளது. உண்மையில் இது பெருமைக்குரிய விஷயம் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. 



அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான Waiting for a Visa கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. 

எனினும், கொலம்பிய பேருந்தில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டது பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதே பேருந்தின் புகைப்படம் பல்வேறு வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News