செய்திகள்
காங்கிரஸ் தலைவர்கள்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: வரும் 24-ந்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

Published On 2020-09-21 13:30 GMT   |   Update On 2020-09-21 13:30 GMT
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இதற்கு எதிர்க்கட்கிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மூத்தத் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக, மக்களுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வருகிற 24-ந்தேதி நாடு தழுவபிய அளவில் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை ஏ.கே. அந்தோணி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Tags:    

Similar News