செய்திகள்
கொரோனா பரிசோதனை

கேரளாவில் இன்று புதிதாக 2,910 பேருக்கு கொரோனா

Published On 2020-09-21 13:15 GMT   |   Update On 2020-09-21 13:15 GMT
கேரளாவில் இன்று புதிதாக 2,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 39,285 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று 2,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,022 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 39,724 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 98,724 பேர் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News