செய்திகள்
பிரதமர் மோடி

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2020-09-19 22:26 GMT   |   Update On 2020-09-19 22:26 GMT
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி:

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளது.

வரும் அக்டோபரில் பீகாரில் சட்டசபை தேர்தலையும் சந்திக்க இருக்கிறது. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோல், பீகாரில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையிலான கர்தக் என்ற கண்ணாடி இழை வழியே இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
Tags:    

Similar News