செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது - ராகுல் காந்தி

Published On 2020-09-18 18:20 GMT   |   Update On 2020-09-18 18:20 GMT
கொரோனா வைரசுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா பெருந்தொற்று, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை முறையாக கையாளவில்லை என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

Similar News