செய்திகள்
கைது

கொரோனா மையத்தில் இளம்பெண்ணை கற்பழித்த ஊழியர்

Published On 2020-09-13 22:23 GMT   |   Update On 2020-09-13 22:23 GMT
குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி கொரோனா தனிமை மையத்தில் இளம்பெண்ணை கற்பழித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தானே:

மும்பையை அடுத்த தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, அண்மையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் அங்குள்ள தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அந்த தனிமை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த 27 வயது வாலிபர், அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் கூறினால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஊழியர், 3 சந்தர்ப்பங்களில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், நேற்று முன்தினம் சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News