செய்திகள்
கங்கனா ரணாவத், உத்தவ் தாக்கரே

நடிகை கங்கனா ரணாவத் மீது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தாக்கு

Published On 2020-09-08 04:35 GMT   |   Update On 2020-09-08 04:35 GMT
பிழைப்புக்காக மும்பை வந்து சம்பாதிக்கும் சிலர் தாங்கள் வாழும் நகரத்துக்காக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் இப்படி செய்வதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.
மும்பை :

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு மகாராஷ்டிரா ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டண கணைகளை தொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் ரதோடு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசியபோது, நடிகை கங்கனா ரணாவத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “அனில் ரதோடு ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிரா வந்தவர். அவர் மகாராஷ்டிராவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். பிழைப்புக்காக மும்பை வந்து சம்பாதிக்கும் சிலர் தாங்கள் வாழும் நகரத்துக்காக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் இப்படி செய்வதில்லை” என்றார்.
Tags:    

Similar News