செய்திகள்
சோனியா காந்தி

பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க செப்.8ல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

Published On 2020-09-06 18:21 GMT   |   Update On 2020-09-06 18:21 GMT
பாராளுமன்ற கூட்டத் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் வரும் 8-ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் விடுமுறை இல்லாமல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் எம்.பி.க்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாராளுமன்ற இரு அவைகளையும் தலா 4 மணி நேரம் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.

இரு அவைகளும் காலை, மாலை தனித்தனியாக நடத்தப்படுகிறது. மேல்சபை காலையிலும், மக்களவை மாலை நேரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில், பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News