செய்திகள்
தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமாரின் அறிவிப்பு கொலை செய்வதை ஊக்குவிப்பது போல் உள்ளது -தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Published On 2020-09-05 10:19 GMT   |   Update On 2020-09-05 10:19 GMT
பீகாரில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருக்கிறார்.
பாட்னா:

பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருக்கிறார். கொல்லப்பட்ட ஓபிசி அல்லது பொதுப்பிரிவு மக்களின் உறவினர்களுக்கு ஏன் அரசு வேலைகள் கொடுக்கக்கூடாது? முதல்வரின் அறிவிப்பு எஸ்சி, எஸ்டி பிரிவினரை கொலை செய்வதை ஊக்குவிப்பது போல் உள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் பீகார் மாநிலமும் உள்ளது. பீகாரில் வேலையின்மை விகிதம் 46 சதவீதமாக உள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், எங்கள் அரசு காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்புவதுடன், மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினரில் யாராவது கொலை செய்யப்பட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான சட்ட விதிகளை விரைவில் உருவாக்கும்படி எஸ்சி,எஸ்டி நலத்துறை செயலாளருக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News