செய்திகள்
சண்டை நடந்த பகுதி

ஸ்ரீநகர் என்கவுண்டர்- மேலும் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

Published On 2020-08-30 02:43 GMT   |   Update On 2020-08-30 02:43 GMT
ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்களுடன் சேர்ந்து போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.  தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
Tags:    

Similar News