செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை - போலீஸ்காரர் வீர மரணம்
காஷ்மீரில் போலீசாரும் சிஆர்பிஎப் வீரர்களும் சேர்ந்து நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். ஒரு போலீஸ்காரர் வீர மரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்களுடன் சேர்ந்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்,
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். தொடர்ந்து சண்டை நடைபெறுகிறது என போலீசார் தெரிவித்தனர்.