செய்திகள்
உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று மாலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
டேராடூன்:
உத்தராகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கர்வால் பகுதியில் இன்று மாலை 6.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.