செய்திகள்
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது - ஜே.பி. நட்டா
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும்” என்று ஜேபி நட்டா கூறினார்.