செய்திகள்
ஞ்சுலதா மண்டல்

ஒடிசாவில் பெண் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-23 01:52 GMT   |   Update On 2020-08-23 01:52 GMT
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியின் பெண் எம்.பி. மஞ்சுலதா மண்டலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புவனேசுவரம்:

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியின் பெண் எம்.பி., மஞ்சுலதா மண்டல் (வயது 44) ஆவார். பாத்ரக் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை பெற்றதால், நான் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் தொற்று உறுதி என முடிவு வந்துள்ளது. எனது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. நிலையாகவும் இருக்கிறது.

நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுடன் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

ஒடிசாவில் ஏற்கனவே பர் கார் தொகுதி எம்.பி. சுரேஷ் பூஜாரிக்கும் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்துள்ள 2வது எம்.பி. என்ற பெயரை மஞ்சுலதா மண்டல் பெறுகிறார்.
Tags:    

Similar News