செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

Published On 2020-08-22 10:30 GMT   |   Update On 2020-08-22 10:30 GMT
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
 
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 

மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.

மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News