செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்பை இந்தியா என்றும் நினைவில் கொள்ளும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்பை இந்தியா என்றும் நினைவில் கொள்ளும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.