செய்திகள்
நரேந்திரமோடி

’காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது’ - பிரதமர் மோடி

Published On 2020-08-15 11:35 GMT   |   Update On 2020-08-15 11:35 GMT
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும்.

ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும்.

மேலும், இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அகதிகளின் கண்ணியமான வாழ்க்கையின் ஆண்டாகும்

என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News