செய்திகள்
’காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது’ - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும்.
ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும்.
மேலும், இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அகதிகளின் கண்ணியமான வாழ்க்கையின் ஆண்டாகும்
என அவர் தெரிவித்தார்.