செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா - 996 பேர் பலி

Published On 2020-08-15 05:11 GMT   |   Update On 2020-08-15 05:11 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, ஆகஸ்ட் 15 காலை 8 மணி அளவிலான அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 57 ஆயிரத்து 382 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 8 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 71.61 என்ற அளவில் உள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா இறப்பு சதவிகிதம் 1.94 என்ற அளவில் உள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 679 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 63 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News