செய்திகள்
பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து- பிரதமர் மோடி

Published On 2020-08-15 01:46 GMT   |   Update On 2020-08-15 01:46 GMT
74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News