செய்திகள்
மீட்புப் பணியில ஈடுபட்ட அதிகாரிகள்

கேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா

Published On 2020-08-14 11:16 GMT   |   Update On 2020-08-14 11:16 GMT
கேரள விமான விபத்தின்போது மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்கள் கொரோன வைரஸ் தொற்றை குறித்து ஏதும் யோசிக்காமல் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு விரைவாக மீட்புப்பணியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

துபாயில் இருந்து வந்த விமானம் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 கேரள அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா ‘‘கேரளாவில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு  உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News