செய்திகள்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. அதன்பின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
நேற்று காலை டுவிட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகியது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடரந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார் என்று மருத்துவமனை மீண்டும் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று காலையில் டெல்லி ராணுவ மருத்துவம் ‘‘பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. அதன்பின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
நேற்று காலை டுவிட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகியது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடரந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார் என்று மருத்துவமனை மீண்டும் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று காலையில் டெல்லி ராணுவ மருத்துவம் ‘‘பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.