செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-08-12 22:06 GMT   |   Update On 2020-08-12 22:06 GMT
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 போலீசார் உயிரிழந்தனர்.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி வரும் போலீசார் தொடர்ந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 294 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு 3 போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து, பலியான போலீசாரின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது. இதில் 11 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

பாதிப்பு அடைந்த போலீசாரில் 9 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 2 ஆயிரத்து 84 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News