செய்திகள்
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக்கிற்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அனைத்து தரப்பு மக்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க் கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் இன்று கொரோனா சோதனை செய்தேன் அந்த சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.