செய்திகள்
எரிந்த நிலையில் பஸ்

கர்நாடகா: பஸ் தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பலி

Published On 2020-08-12 03:27 GMT   |   Update On 2020-08-12 03:27 GMT
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பஸ் ஒன்று எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகில் உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் அலறியடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பஸ் முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27  பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News