செய்திகள்
எஸ்.எம்.கிருஷ்ணா

தேசியவாதத்துடன் இந்தியை ஒப்பிட வேண்டாம்: எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து

Published On 2020-08-12 03:09 GMT   |   Update On 2020-08-12 03:09 GMT
இந்தி தெரியாது என்று கூறியதால் கனிமொழி எம்.பி. இந்தியர் அல்ல என்று பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேசியவாதத்துடன் இந்தியை ஒப்பிட வேண்டாம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் தி.மு.க. கட்சியை சேர்ந்த கனிமொழி எம்.பி.யிடம், நீங்கள் இந்தியரா? என்று மத்திய பாதுகாப்பு படை பெண் போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனிமொழிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் கருத்து கூறி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “இந்தி தெரியாது என்று கூறியதால் கனிமொழி எம்.பி. இந்தியர் அல்ல என்று பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேசியவாதத்துடன் இந்தியை ஒப்பிட வேண்டாம்“ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News