செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது என்.ஐ.ஏ.

Published On 2020-08-10 06:14 GMT   |   Update On 2020-08-10 06:14 GMT
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ. கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
திருவனந்தபுரம் :

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்வப்னா சுரேஷ் சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால் ஜாமீன் வழங்க இயலாது என்று கோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Tags:    

Similar News