செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - உள்துறை அமைச்சகம்

Published On 2020-08-09 10:05 GMT   |   Update On 2020-08-09 10:05 GMT
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ந்தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.  இதனிடையே அமித் ஷா குணமடைந்ததாக கூறிய தனது ட்விட்டர் பதிவை பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி  நீக்கினார்.

Tags:    

Similar News