செய்திகள்
அமித் ஷாவுக்கு பரிசோதனையில் நெகட்டிவ்: கொரோனாவில் இருந்து குணமடைந்தார்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வர, அவர் குணமடைந்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ந்தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இன்று வெளியான முடிவில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளதாக பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இதனால் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.