செய்திகள்
கோப்புப் படம்

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல்

Published On 2020-08-09 01:35 GMT   |   Update On 2020-08-09 01:35 GMT
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிகான்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பிரிவினருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று  வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News