செய்திகள்
அபிஷேக் பச்சன்

29 நாட்களுக்குப்பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்

Published On 2020-08-08 17:14 GMT   |   Update On 2020-08-08 17:14 GMT
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிஷேக் பச்சன், பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் ஒரே நேரத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ந்தேதி மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சைக்குப்பின் அமிதாப் பச்சன் கடந்த 3-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதற்கிடையில் அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களிலேயே டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

ஆனால், அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அதில் ‘‘இன்று மதியம் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது. அதனால் டிஸ்சார்ஜ் ஆகிறேன். பிரார்த்தனை செய்தவர்கள் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டிற்குச் செல்ல இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News