செய்திகள்
விபத்துக்குள்ளான விமானம்

கோழிக்கோடு விமான விபத்து: விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனாவா?

Published On 2020-08-08 10:00 GMT   |   Update On 2020-08-08 10:00 GMT
துபாய் - கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா என்ற செய்தி தவறானது என்று மலப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா இருந்ததாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா என்று பரப்பப்படும் செய்தி தவறானது என்று மலப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 1800 2222 71, விமான  நிலைய கட்டுப்பாட்டு அறை - 0483 2719493, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901.
Tags:    

Similar News