செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா

Published On 2020-08-07 17:11 GMT   |   Update On 2020-08-07 17:11 GMT
ஆந்திரா மாநிலத்தில் ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே  மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று 10,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 1842 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News