செய்திகள்
தற்கொலை

பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

Published On 2020-08-07 14:58 GMT   |   Update On 2020-08-07 17:02 GMT
மகாராஷ்டிராவில் 22 வயது வாலிபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தின் ஜவார் நகரத்தில் உள்ள வாடா தாலுகாவைச் சேர்ந்த நவ்நாத் பாங்கே ஓட்டல் ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். 22 வயதாகும் இவர் சக ஊழியர்களுடன் முதலாளி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

நேற்று வேலையின் இடைவெளியின்போது தனது அறைக்கு வந்து உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, பேஸ்புக் செயலியை திறந்து லைவ்-ஸ்ட்ரீம் ஆன் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து போனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது அவரது சக நண்பர்கள் தற்கொலை செய்து விடாதே என்று கெஞ்சிய நிலையிலும் நவ்நாத் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தற்கொலை குறித்து நவ்நாத் கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News