செய்திகள்
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
இடுக்கி மாவட்டம் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா பகுதி பெட்டிமுடி கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன.
இந்த கோர சம்பவத்தில் தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். 65-க்கும் மேற்பட்டோரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், காயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.