செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

டெல்லியில் இன்று 1,299 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: 15 பேர் பலி

Published On 2020-08-06 18:04 GMT   |   Update On 2020-08-06 18:04 GMT
டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இன்று 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் பயனாக தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இன்று புதிதாக 1,299 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆக உயர்ந்துள்ளது.

1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 1,27,124 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 10,348 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 15 பேர் உயிரிழந்ததால், மொத்தம் 4059 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News